ஆகஸ்ட் 3 முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை !!! – அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆனது வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக அரசு கல்வித்துறை அதிரடியாக அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. எனவே மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிற்கான எந்த மேற்கொள்ளப்படவில்லை.
எனவே தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையும் நடைபெறாமல் இருக்கிறது. ஆனால் வரும் 3 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அது தவறானது என இதுநாள் அறிவித்து கல்வித்துறை இப்போதைய சூழலில் மாணவர் சேர்க்கை நடப்பது என்பது கடினம் என்பதனால் அது குறித்த எந்த நடவடிக்கையும் இப்பொழுது மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவித்து இருந்தது.
ஆனால் தற்போது வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தற்போது அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பம் விநியோகம் செய்யப்படவுள்ளது.
6 முதல் 10 வகுப்பு வரை மாணவ-மாணவிகள் சேர்க்கை ஊரடங்கு முடிந்தவுடன் 3.8.2020 முதல் நடைபெறும் என்றும் மாணவ-மாணவிகளுக்கு விண்ணப்ப படிவமும் அன்றே வழங்கப்படும் என்றும் பதினொன்றாம் வகுப்பிற்கு விண்ணப்ப படிவம் வழங்கும் தேதி மதிப்பெண் பட்டியல் வந்தவுடன் அறிவிக்கப்படும் என்றும் அரசு பள்ளிகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் எந்த இடத்திலும் கூட்டம் சேரக்கூடாது என்பதை புரிந்து கொண்டு பெற்றோர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
மொத்தத்தில் மக்கள் தொகையை குறைக்க நல்ல நடவடிக்கை