11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு இருவகையான பாடத்திட்டம் ! – தமிழக அரசு முடிவு
தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவ்வாறு பள்ளிகளை திறந்தால் மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு இருவகையான பாடத்திட்ட முறையினை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி விருப்ப பாடங்களை மாணவர்களே கற்று கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
புதிய கல்வியாண்டு !!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அடுத்த கல்வி ஆண்டு தொடங்கினாலும் தற்போது வரை ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
புதிய கல்வியாண்டில் இனியாவது பள்ளிகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் நவம்பர் 16 முதல் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையிலேயே பள்ளிகளின் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
இருவகையான பாடத்திட்டம் !!
இந்த கல்வியாண்டிற்கான கால அளவு குறைவாக உள்ளதால் தேர்விற்குள் அனைத்து பாடங்களை விரைந்து முடித்திட இருவகையான பாடத்திட்டம் முறை செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது கட்டாய பாடம் மற்றும் விருப்ப பாடம் என பாடங்கள் பிரிக்கப்பட உள்ளது.
கட்டாய பாடங்கள் என்பது ஆசிரியர்கள் நேரிடையாக வகுப்புகளில் கற்பிக்கும் கடினமான மற்றும் புதிய பாட விவரங்கள் ஆகும். விருப்ப பாடங்கள் என்பது மாணவர்களே வீடியோ போன்ற ஊடகங்கள் மூலமாக தாங்களாகவே கற்று கொள்ளுவது ஆகும். இதன் மூலம் கட்டாய பாடங்களை மற்றும் ஆசிரியர்கள் நடத்துவர். விருப்பப் பாடங்களை மாணவர்களே கற்று கொள்வர். பொதுத்தேர்வுகள் ஜூன் மாதமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்பதனால் இவ்வாறு மாற்று வழிகள் கையாளப்படுகிறது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |