தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் – மத்திய அரசுக்கு கடிதம்!!!
கொரோனா தொற்று:
கொரோனா தொற்று நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் பரவத் தொடங்கியது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், கொரோனா நோய் அதிவேகத்தில் பரவும் தொற்று நோயாக உள்ளதால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் முதலில் கொரோனா நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் பல நாடுகளும் ஈடுபட்டு வந்தது. இந்தியாவிலும், கொரோனா நோய் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தாமதம் – ஜேஇஇ, நீட் தேர்வுகள் பாதிப்பு!!
கொரோனா தடுப்பூசி:
கொரோனா தடுப்பூசி முதலில் குறைந்த அளவிலேயே வழங்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தடுப்பூசியை குறைந்த அளவில் வழங்கியது. தடுப்பூசி குறைந்த அளவில் வழங்கப்பட்டதால் முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டது. அந்த வகையில் காவல், மருத்துவ துறையினர், சுகாதார பணியாளர்கள் போன்ற களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி முதல் கட்டமாக போடப்பட்டது.
கோரிக்கை:
தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் அதிக அளவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள தொடங்கியுள்ளனர். இதனால் மாநிலத்திற்கு தேவையான தடுப்பூசி இருப்பில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்ட் மற்றும் 5 லட்சம் கோவாக்ஸின் தடுப்பூசிகள் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்