தமிழகத்தில் இனி சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை? அரசு பரிசீலனை!
தமிழகத்தில் கோடை கால வெப்பத்தின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன. பல இடங்களில் கோடை வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. இதனால் சனிக்கிழமைகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விட தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நடப்பு கல்வி ஆண்டின் கடைசி வேலை நாள் மே மாதம் 13 ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு பரிசீலனை:
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டிலேயே ஆன்லைனில் படித்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் பள்ளிகளுக்கு உற்சாகமாக சென்று வருகிறார்கள். மேலும் தற்போது பொதுத் தேர்வு முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை வேகமாக செய்து வருகிறது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, வரும் மே மாதம் 6 ஆம் தேதி முதல், மே மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மே மாதம் 9 மாதம் ஆம் தேதி தொடங்கி மே மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, மே மாதம் 5 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 28 ஆம் தேதி முடிவடைய உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை கிடைப்பதில் சிக்கல்? அரசு மறுப்பு!
பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தாமதமாக திறந்ததால் முழு ஆண்டு தேர்வுக்குள் பாடத்திட்டத்தை முடிப்பதற்காக ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி ஆன நிலையிலும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. பொதுவாக கோடை வெப்பத்தின் தாக்கத்தால் பள்ளிகளுக்கு ஏப்ரல் 20-ம் தேதி வாக்கில் கோடை விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை கோடை விடுமுறை நாட்கள் குறைந்து உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் கோடை வெப்பம் பல இடங்களில் நெருப்பு உமிழும் அளவுக்கு வதைக்கிறது. மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வீடுகளுக்கு வருவதற்குள் சோர்ந்து விடுகிறார்கள். மேலும் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
கல்லூரி மாணவர்களுக்கு ஜூன் 1 முதல் 16 வரை கோடை விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இதனால் மாணவர்களின் நலன் கருதி, 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பெற்றோரிடம் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைக்கு செவி சாய்த்த தமிழக அரசு 1 ஆம் வகுப்பு முதல், 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து முதல்வருடனும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. முதல்வர் ஒப்புதல் அளித்துவிட்டால் இனி 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.