தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை 50% பாடத்திட்டம் குறைப்பு – பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்படுவதால் 1 முதல் 12ம் வகுப்பு வரை அதிகபட்சம் 50% வரையிலான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பாடத்திட்டம் குறைப்பு:
தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்படுகிறது. இருப்பினும் கடந்த கல்வியாண்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்த ஜனவரி மாதத்தில் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தகுந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் பொதுத்தேர்வுக்கு மாணவர்களுக்கு 30% பாடங்கள் குறைத்து அரசு உத்தரவிட்டது.
நீட் தேர்வு விண்ணப்ப திருத்தம் நாளை இறுதி நாள் – NTA அறிவிப்பு!
ஆனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 2021 – 2022ம் கல்வியாண்டு தொடங்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. கொரோனா 2ம் அலை குறைந்து வரும் நிலையில், அக்டோபர் மாதத்தில் மீண்டும் கொரோனா 3ம் அலை பாதிப்பு அதிகரிக்கும் என்றும், குழந்தைகளை அதிக அளவில் தாக்கும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் நடப்பாண்டிலும் ஆன்லைன் வகுப்புகளே தொடரும் நிலை உள்ளதால், தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை குறைந்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 1 மற்றும் 2ம் வகுப்பு 50% மும், 3 மற்றும் 4ம் வகுப்புக்கு 49% மும், 5 ம் வகுப்புக்கு 48% , 6ம் வகுப்புக்கு 47%, 7ம் வகுப்பு 8ம் வகுப்பு 46%, 9ம் வகுப்பு 38%, 10ம் வகுப்பு 39%, 11 மற்றும் 12 ம் வகுப்புக்கு 30 முதல் 35% என்ற அளவில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.