தமிழகத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலை – புயலை சமாளிக்க அரசின் அதிரடி !
தமிழகம் மற்றும் அந்தமானை ஒட்டிய கடல் பகுதிகளில் புதிதாக உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த கனமழையானது தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களிலும் பரவலாக பெய்ய வாய்ப்புகள் உள்ளது.
Follow our Instagram for more Latest Updates
வானிலை அறிக்கையின் படி, காற்றழுத்த தாழ்வு மண்டலமானது டிசம்பர் 8ம் தேதி வாக்கில், வடதழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடேலாரப்பகுதிக்கு அருகில் வந்தடையும். இதனால் டிசம்பர் 7, 8 மற்றும் 9ம் தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், தமிழக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர், K.K.S.S.R ராமசந்திரன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்திற்கு டிசம்பர் 9ம் தேதி RED ALERT.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? வெளியான முக்கிய தகவல்!
Exams Daily Mobile App Download
அந்த அறிக்கையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புயல் உருவாக்க இருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், 5093 நிவாரண முகாம்கள், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், குறிப்பாக, சென்னையில் 169 நிவாரண மையங்களும், 809 மழை நீரை வெளியேற்றும் இயந்திரங்களும் தயார் நிலையில் இருப்பதாகவும், கூடுதல் அலுவலர்களுடன் அவசர கால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.