தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – அரசு ஆலோசனை!!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு வாரம் முழுவதும் வேலை நாட்களாக உள்ளதால் சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற தமிழக ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு பரிசீலித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆல் பாஸ் அறிவிப்பு:
தமிழகத்தில் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட நடத்தப்பட்ட நிலையில், தமிழக அரசு அந்த மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யபட்டாலும் வழக்கம் போல் பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
10/12 முடித்தவர்களுக்கு தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் வேலை !!!
பயிற்சி வகுப்புக்களை:
இதனால் வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு நுழைவு தேர்வுகளுக்கான தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்த உத்தரவிட்டுள்ளது. இதனால் வாரத்தில் ஏழு நாட்களும் பள்ளிகள் செயல்படும் நிலையில் உள்ளது.
ஆசிரியர்களின் கோரிக்கை:
தமிழக ஆசிரியர்கள் வாரத்தில் ஏழு நாட்களும் பள்ளி செயல்படுவதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். அதனால் தமிழக பள்ளிகளில் சனிகிழமை அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர். ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்