தமிழகத்தில் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு புதிய விதிமுறைகள் – அரசு வெளியீடு!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட மற்ற அனைத்து தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
விதிமுறைகள் வெளியீடு
பொதுவாக மத்திய மற்றும் மாநில அரசுத்துறைகளில் பணிகள், போட்டித்தேர்வுகள் போன்றவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு சில முக்கிய சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்களுக்கும் கல்வி கட்டணம் உள்ளிட்ட சில கட்டணங்களில் இருந்து அரசு விலக்கு அளித்து வருகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும் தேர்வுகளுக்கான சில முக்கிய விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 2 & குரூப் 4 VAO தேர்வு தேதிகள் இன்று அறிவிப்பு? முக்கிய ஆலோசனை!
அந்த வகையில் பள்ளி, கல்லூரித் தேர்வுகள், அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான தேர்வுகளிலும் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களுக்கு தேர்வு எழுத உதவும் நபர் அல்லது வாசிக்கும் நபர், ஆய்வக உதவியாளர் தேர்வு நடத்தப்படும் இடத்தில் மாற்றுத்திறனாளிகளின் விருப்பத்தின் படி கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் தேர்வு எழுதும் ஒருவருக்கு நியமிக்கப்படும் உதவியாளர்கள் வேகமாக தேர்வு எழுதுபவராக இருக்க வேண்டும்.
TNPSC வேலைவாய்ப்புகள் 2021 – விண்ணப்பிக்க இன்னும் 2 நாள் மட்டுமே …!
தொடர்ந்து மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளின் தேர்வுக்கு கல்வித்தகுதி உள்ள எழுதுபவர், வாசிப்பவர், ஆய்வக உதவியாளர் அடங்கிய கமிட்டியை ஏற்படுத்த வேண்டும். அந்த கமிட்டியில் இருக்கும் ஒருவரை மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதனுடன் கணினி வழித் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள் ஒரு நாள் முன்பே உதவியாளர்களை சரிபார்த்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
Oil India நிறுவனத்தில் 500+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
மாற்று மொழிகளில் தேர்வு எழுத இருக்கும் மாற்றுத்திறனாளிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட உதவியாளரை வைத்து கொள்ளலாம். தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட வேண்டும். மேலும் தேர்வறைகள், மையங்களில் சாய்தளம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். தனி அறையில் நடத்தப்படும் தேர்வுகளில் கால்குலேட்டர், பிரய்லி உபகரணங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இந்த புதிய தேர்வு விதிமுறைகள் அனைத்தும் தேர்வுகள் நடைபெறும் போது கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.