நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கப்படும்!!
மருத்துவ படிப்பில் சேருவதற்கு தகுதி தேர்வான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கட் ஆப் அடிப்படையில் மட்டுமே மருத்துவம் படிக்க இயலும் என்ற நிலையை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த மாதம் 2020 ஆண்டுக்கான நீட் தேர்வு பல எதிர்ப்புகளுக்கிடையே பாதுகாப்பாக நடைபெற்று முடிந்தது. நாடு முழுவதும் மருத்துவம் பயில மாணவர்கள் இத்தேர்வை எழுதினார்.
வேலைவாய்ப்பு செய்திகள்
2 ஆம் முறையாக நீட் பயிற்சி
நீட் தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக மாணவர்கள் காத்திருந்த நிலையில் தேர்வு முடிவானது அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் பலர் இத்தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற்றனர். இதனிடையில் தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 2 ஆம் முறையாக நீட் பயிற்சி அளிக்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, நீட் தேர்வில் எதிர்பார்த்த அளவுக்குள் மேல் அரசு பள்ளி மாணவர்கள் பலர் வெற்றி பெற்றனர். இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கு கூடுதலாக 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. மற்றும் ‘நீட் தேர்வில் குறைவான மார்க் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் முறையாக ஆன்லைனில் நீட் பயிற்சி அளிக்கப்படும். பிளஸ் டூ முடித்த 9,438 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்’ என்றார்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்