தமிழக அரசில் ரூ.58600 சம்பளத்தில் இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு – பிப்.23 கடைசி நாள்!
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப பல்வேறு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இராமேஸ்வர அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் பராமரிப்பில் இருந்து வரும் இராமேஸ்வர அருள்மிகு ராமநாதசுவாமி கோவிலில் பல்வேறு பணியிடங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தட்டச்சர், டிக்கெட் விற்பனையாளர், காவலர், தூய்மை பணியாளர் போன்ற பணியிடங்களில் ஏராளமான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. இப்பணிக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பிப்ரவரி 1ம் தேதி 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இப்பணிக்கு பிப்ரவரி 1ம் தேதி அன்று நிலவரப்படி 18 வயது முதல் 35 வயது நிரம்பியவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு குறைந்தபட்சமாக 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து அதன்பின் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதன் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.18500 முதல் ரூ.58600 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க https://rameswaramramanathar.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=35671 என்ற இணையதள பக்கத்திலோ அல்லது நேரில் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், ராமேசுவரம்- 623 526, ராமநாதபுரம் மாவட்டம் என்ற அஞ்சல் முகவரிக்கு பிப்ரவரி 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.