தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – யார் யாருக்கு கிடைக்கும்?
தமிழக அரசின் அறிவிப்பின் கீழ் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதி உதவியானது தகுதியான நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த நிதி உதவி பெறும் பயனாளர்களின் விவரங்கள் தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
இல்லத்தரசி நிதி உதவி:
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டிருந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கும் திட்டமானது விரைவில் நிறைவேற்றப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதாவது இந்த நிதி உதவியை பெறுவதற்கு பெண்கள் குடும்ப அட்டையின் தலைவராக இருக்க தேவையில்லை என விளக்கம் கொடுத்த தமிழக அரசு, தகுதியுடைய பயனர்களுக்கு இந்த உதவி வழங்கப்படும் என சட்டப்பேரவையின் போது தெரிவித்திருந்தது.
செப்.1ம் தேதி 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
அந்த வகையில் அரசு தரும் ரூ.1000 நிதி உதவியை பெறுவதற்கு சில வரைமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் படி குடிசை வீடுகளில் வசிப்பவர்கள், மாதந்தோறும் 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துபவர்களது குடும்பங்களுக்கு இந்த நிதியுதவி கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதாவது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ், அனைத்து குடிசை வீடுகளுக்கும் இலவச மின்சாரமும் மற்ற வீடுகள் அனைத்திற்கும் சுமார் 100 யூனிட் வரை மின்சாரத்தை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ரூ.15,000/- சம்பளத்தில் பவர்கிரிட் ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
இந்த செலவினங்கள் அரசு தரப்பில் இருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழகத்தில் சுமார் 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும், 100 யூனிட்டுக்கு கீழ் இலவச மின்சார சேவைகளை 73 லட்சம் குடும்பங்கள் பெற்று வருகிறது. தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி குடிசை வீடுகளில் வசிப்பவர்கள், 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துபவர்களது குடும்பங்களுக்கு மாதம் ரூ.1000 நிதி உதவி கொடுக்கப்படும் என்றால் 84 லட்சம் குடும்பங்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.