தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பு – அரசாணை வெளியீடு!!
தமிழகத்தில் மருத்துவ நுழைவு தேர்வு ‘நீட்’ மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள். தற்போது அதற்கான அரசாணை வெளியாகியுள்ளது.
நீட் ஆய்வு குழு:
மத்திய அரசினால் ஆண்டிற்கு ஒரு முறை மருத்துவ நுழைவு தேர்வாக நடத்தப்பட்டு வருவது தான் நீட் தேர்வு. இந்த தேர்வு மூலம் மருத்துவ சேர்க்கை நடைபெற்று வரும். தமிழகத்தில் நீட் தேர்வு மூலம் பல்வேறு இன்னல்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவ கனவுகளை கொண்டுள்ள மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது.
ஜூன் 7 முதல் மெட்ரோ ரயில் சேவைகள், மால்கள் திறப்பு – முதல்வர் அறிவிப்பு!
தற்போது இதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்பிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் திரு.இராஜன் அவர்கள் தலைமையில் உயர்நிலைக்குழு அமைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு முறையால் நமது மாநிலத்தில் உள்ள கிராமப்புற, நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ் வழியில் கல்வி பயில்வோர் போன்ற நமது சமுதாயத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலை உள்ளதாக கல்வியாளர்கள் பலரும் கருது தெரிவித்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இதனை கருதியே சமூக நீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு முறை கைவிடப்பட வேண்டும் என்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் படி 12 ஆம் வகுப்பு இறுதி தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ கல்லூரி இடங்கள் நிரப்பிட வேண்டுமென்றும் தொடர்ந்து வலியுறுத்தி இதற்கான பல சட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. இவர் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.