தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்வு – ஓய்வு வயது நீட்டிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1, 2022 முதல் வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
அகவிலைப்படி உயர்வு:
கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளின் காரணமாக மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தொழில்துறைகள் இயங்காததால் அரசுக்கு வரிவசூல் குறைந்தது. எனவே வருவாய் இழப்பு ஏற்பட்டு நிதி குறைந்தது. எனவே அரசு செலவினங்களை குறைத்து கொள்ள திட்டமிட்டு அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கி வந்த அகவிலைப்படி உயர்வினை (DA) நிறுத்தி வைத்தது. இதனால் மிச்சமான தொகை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு செலவிடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!
தற்போது கொரோனா தொற்று குறைந்து பொருளாதாரம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. எனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை அறிவித்தது. இதனை தொடர்ந்து மாநில அரசுகளுடன் அடுத்தடுத்து அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டன. தமிழக அரசும் அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை 2021 – செப்டம்பர் 8 முதல் துவக்கம்!
இதில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2022 ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மேலும் சத்துணவு ஊழியர்களின் ஒய்வு வயது 60-ஆக நீட்டிக்கப்படும் என விதி எண் 110-ன் கீழ் அறிவித்துள்ளார். இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.