தமிழக அரசின் 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை – சட்டப்பேரவையில் நாளை தாக்கல்!
தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சியின் 3 மாத கால ஆட்சியில், முதன் முறையாக 2021-22 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கணக்கு நாளை (ஆகஸ்ட் 13) சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பட்ஜெட் தாக்கல்:
தமிழகத்தில் அனைத்து கட்சிகளை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நாளை (ஆகஸ்ட் 13) துவங்க இருக்கிறது. இந்த கூட்டமானது வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி வரை சுமார் 29 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நாளை (ஆகஸ்ட் 13) துவங்கும் கூட்டத்தொடரில் முதலாவது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதாவது தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி துவங்கி 3 மாதங்கள் நிறைவுபெற இருக்கும் நிலையில், இக்கட்சி தனது முதல் பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்கிறது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு!
அந்த வகையில் தற்பொழுது துவங்கியிருக்கும் 2021-22 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கையை தற்போதுள்ள நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய இருக்கிறார். முன்னதாக புதிய அமைச்சர்களுடன் கூடிய முதல் சட்டப்பேரவை கூட்டமானது நாளை (ஆகஸ்ட் 13) காலை 10 மணியளவில் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன், ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனில் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
வழக்கத்தை போல பட்ஜெட் உரைகள் காகித முறையில் இல்லாமல், இந்த முறை இ-பட்ஜெட்டாக கொடுக்கப்படுகிறது. இந்த இரண்டு பட்ஜெட் மீதான விவாதமும் வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் புதிய முதல்வரான முக ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் செய்யப்படும் முதல் பட்ஜெட் அறிக்கை தாக்கல் இதுவாக இருப்பதால், பொது மக்களுக்கு பயன்படும் வண்ணம் பல வகையான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.