தமிழகத்தில் ஆகஸ்ட் 23 முதல் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் – தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் 2020- 2021 ம் கல்வி ஆண்டில் பயின்ற 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
மதிப்பெண் சான்றிதழ்:
தமிழகத்தில் கடந்த 2020 – 2021ம் கல்வியாண்டில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும், கல்வி டிவி வாயிலாகவும் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. திடீரென்று கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்ததால் கடந்த ஜனவரி மாதத்தில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் பள்ளிகளில் தொடங்கப்பட்டது.
கொரோனாவிற்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி அவசியமில்லை – உலக சுகாதார நிறுவனம் தகவல்!
இந்நிலையில், தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியதால் பள்ளிகள் மூடப்பட்டு, பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்று முறையில் மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனடிப்டையில் மதிப்பெண்களும் வழங்கப்பட்டு விட்டது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் மதிப்பெண்கள் வெளியிடப்பட்ட நிலையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது குறித்து அறிவிப்புகள் வெளிவராமல் இருந்தது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020 – 2021ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளியில் பதிவு செய்துள்ள தொலைபேசி எங்களுக்கு மாணவர்களின் தேர்வு எண் ஆகஸ்ட் 21ம் தேதி காலை 11 மணிக்கு அனுப்பி வைக்கப்படும். ஆகஸ்ட் 23 முதல் 31ம் தேதி வரை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.