கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் – தமிழக சுகாதாரத்துறை!
தமிழக சுகாதாரத்துறை கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் பயணிகள் அனைவர்க்கும் கொரோனா பரிசோதனையை கட்டாயமாகியுள்ளது. இதனால் அனைத்து பகுதிகளிலும் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது.
கொரோனா பரிசோதனை:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பரவல் பாதிப்பு குறைந்து விட்டது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு சற்று அதிகமாக இருந்து வருகிறது. அங்கு அரசு கட்டுப்பாடுகளை நீடித்துள்ளது. ஆனால் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தினசரி பாதிப்பு 30,000 என்ற அளவில் உள்ளது. இன்னும் அங்கு கொரோனா 2ம் அலை பாதிப்பு அதிகமாக தான் உள்ளது. மேலும், நிபா வைரஸினால் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இதனால் கேரள மாநிலத்தின் தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் புதிய ஐடி பார்க் – அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!
இதன் பேரில், தமிழகத்தின் அனைத்து கேரளா மாநில எல்லைகளிலும் அரசு தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் கேரளா மாநிலத்தில் 30,196 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 181 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்று 15.87 ஆக இருந்த தொற்று பாதிப்பு விகிதம் தற்போது 17.63% ஆக அதிகரித்துள்ளது. ஈரோடு வழியாகக் கேரளாவுக்குத் தினமும் 60 க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கேரளாவிலிருந்து ஈரோட்டுக்கு வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
தமிழக சுகாதாரத்துறை அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கி அறிவுறுத்தியுள்ளது. இதனால், கேரளாவிலிருந்து ரயிலில் வரும் பயணிகள் விவரங்களை சுகாதாரத்துறையினர் சேகரித்து அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்களுக்கு அங்கேயே கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை முடிவில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.