தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கடைகள் திறக்க அனுமதி – ஜூன் 7 முதல் தளர்வுகள் அமல்!
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாளை (ஜூன் 7) முதல் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் மட்டும் குறைந்த அளவிலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜூன் 7 முதல் தளர்வுகள்:
தமிழகத்தில் 14-6-2021 காலை 6-00 மணி வரை, சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின் போது கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் கட்டுப்படுத்தும் நோக்கில் சில தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டு உள்ளன. தற்போது நாளை முதல் (ஜூன் 7) அனைத்து மாவட்டங்களிலும் அனுமதிக்கப்பட்டு உள்ள செயல்பாடுகளை கீழே காணலாம்.
TN Job “FB Group” Join Now
- தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.
- அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
தமிழக ரேஷன் கடைகளில் 14 மளிகைப் பொருட்கள் & ரூ.2000 – ஜூன் 15 முதல் விநியோயகம்!
- சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
- தீப்பெட்டி தொழிற்சாலைகள் 5௦ சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.