தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்க அரசு அனுமதி – மாணவர் சேர்க்கை!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அலுவலக பணிகளை மேற்கொள்ள பள்ளி, கல்லூரிகளை மீண்டுமாக திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா பரவல் தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டது. தவிர கல்லூரிகளிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் மீண்டுமாக துவங்கி நடைபெற்று வந்தது.
தமிழகத்தில் ஜூன் 14 முதல் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி? அரசு விளக்கம்!
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா 2 ஆம் பரவல் எதிரொலியாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா 2 ஆம் அலையின் தாக்கம் சற்று குறைந்து வரும் நிலையில், அரசு சில தளர்வுகளை அளித்து வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்த பிற்பாடு, 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான புதிய வகுப்புகள் இம்மாதம் முதல் துவங்க உள்ளது.
TN Job “FB Group” Join Now
அதனால் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட சில அலுவலக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதால், ஊரடங்கு தளர்வில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை மீண்டுமாக திறக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ள, பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.