நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் : புதியதாக 15,000 வீடுகள் கட்ட நடவடிக்கை – அமைச்சர் பேட்டி!!
தமிழகத்தில் குடிசைகள் இல்லாத தலைநகராக சென்னையை உருவாக்க நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் புதிதாக 15,000 வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பரசன் தகவல் தெரிவித்துள்ளார்.
வீடுகள்
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றதும், குடிசை மாற்று வாரியத்தின் பெயரை, ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ என மாற்றியமைத்தார். அத்துடன் இத்திட்டத்தின் விதிமுறைகளையும் மாற்றியமைத்துள்ளார். இதில் குறிப்பாக குடும்பத் தலைவியின் பெயரில்தான் வீடுகள் வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டார்.
Exams Daily Mobile App Download
இத்திட்டத்தின் கீழ் நன்கு வடிவமைக்கப்பட்ட நகர்ப்புற வீடுகள் கட்டி தரப்பட்டு வருகின்றன. அத்துடன் தனியார் கட்டுமான அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் அனைத்து வசதிகளும் கட்டி தரப்படுகிறது. இதில் குறிப்பாக குழந்தைகள் விளையாடுவதற்கென தனியாக மைதானம் கூட கட்டி தரப்படுகிறது. மேலும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வாயிலாக பல்லாயிரக்கணக்கான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை தீபத் திருவிழா… 22 லட்சம் பேருக்கு அன்னதானம் – ஆணை இல்லாமல் வழங்க தடை!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் இது தொடர்பாக அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளதாவது, தற்போது மயிலாப்பூர் நொச்சிநகர் பகுதியில் கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் இன்னும் 1 வார காலத்திற்குள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என கூறியுள்ளார். மேலும் இதே போன்று புதிதாக 15,000 வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து 4 ஆண்டுகளில் 27,000 புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.