தமிழக அரசு பள்ளிகளில் ஜூன் 13 முதல் மாணவர் சேர்க்கை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மே 13 முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 13 ஆம் தேதி முதல் அடுத்த கல்வியாண்டு துவங்க இருக்கும் நிலையில் ஜூன் 13 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. அதனை தொடர்ந்து இந்தாண்டு தான் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. கொரோனாவினால் சரியாக மாணவர்களுக்கு பாடங்கள் எதுவும் நடத்தாத காரணத்தினால் கல்வித்திறன் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு? ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பு!
மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த பல மாநிலங்களில் கோடை விடுமுறையும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மே 13 முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை உள்ள 30 நாட்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. மேலும், ஆன்லைன் வகுப்பு முடிந்து பள்ளி துவங்கப்பட்டத்தில் இருந்தே மாணவர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் வகுப்புகள் நடைபெற்றது. இதனால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருமே சனிக்கிழமை விடுமுறை அளிக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் அடுத்த கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமையும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதியில் இருந்து அடுத்த கல்வியாண்டு துவங்க இருக்கிறது. மேலும் ஜூன் 13 ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே மாணவர் சேர்க்கை துவங்கிவிடும். இந்தாண்டு தான் புதிதாக பள்ளிகள் திறந்த பிறகு மாணவர் சேர்க்கையை நடத்தவுள்ளனர்.