அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு 2020 !!
நாடு எங்கும் பரவி வரும் கொரானா நோய் தோற்று காரணமாக அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் சேர்க்கையை மட்டும் தற்போது ஆரம்பித்து விட்டது பள்ளி நிர்வாகங்கள். இதில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களை விட அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் ஆசியர்கள் தற்போது குறைவாகவே உள்ளனர். இந்நிலையில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதால் பள்ளிநிர்வாகம் குழம்பிய நிலையில் உள்ளது. இதனால் ஆசிரியர்களின் நியமனம் இந்த ஆண்டு அமல்படுத்தப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தற்போது பரவி வரும் கொரானா கிருமியினால் அரசு தேர்வுகள் யாவும் குறைவாகவே நடத்த பட உள்ளது. எனவே எவ்வாறு புதிய ஆசியர்கள் நியாப்பிக்கப்படுவார்கள் என அனைவரிடமும் கேள்வியும் எழுந்துள்ளது.
அரசு பள்ளி ஆசியர்களிடம் இது குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு புதிய ஆசியர்கள் நியமனம் அதிகப்படியாக தமிழகத்தில் நடைபெறவில்லை. ஆனால் தற்போது மாணவர்களின் சேர்க்கை அரசு பள்ளிகளில் அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டாவது அரசு புதிய ஆசியர்களை நியமிக்கவேண்டும் என்று நாங்கள் அரசிடம் கோரிக்ககை வைத்துள்ளோம். இதுவரை முதுகலை பட்டதாரி ஆசியர்கள் மட்டுமே கடந்த 6 ஆண்டுகளாக பணியமர்த்தப்பட்டனர் இனி இளங்கலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அரசு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்