தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 2022 – மாணவர் சேர்க்கை உயர்வு!
தமிழகத்தில் 2021-2022 கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதால் ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை பார்க்கலாம்.
ஆசிரியர் காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. அதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது.
இந்தியாவில் ஜன.22 முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் – விமான பயணிகள் கவனத்திற்கு!
அந்த வகையில் ஒவ்வொரு கல்வி ஆண்டும் ஆகஸ்ட் மாத நிலவரப்படி நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான ஆசிரியர் பணியிடத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் பி.ஏ.நரேஷ் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழக போலீசார் கவனத்திற்கு – ‘CLAPP’ என்ற விடுப்பு செயலி அறிமுகம்! முழு விபரம் இதோ!
இந்த சுற்றறிக்கையில் கூறியதாவது, மாணவர்களின் சேர்க்கை நடப்பாண்டில் அதிகரித்துள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதால் ஆசிரியர் அதிகம் தேவையுள்ள பள்ளிகளைக் கண்டறிந்து அதிக காலிப்பணியிடங்களை அறிவிக்க அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டில் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு அதிக காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.