தமிழக அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – நீட் தேர்வு விண்ணப்பம்!
தமிழகத்தில் நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு துவங்கியுள்ள நிலையில், அரசு பள்ளிகளில் படித்த நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் உதவ வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நீட் விண்ணப்பம்:
இந்திய அளவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் மருத்துவ கல்லூரிகளில் இருக்கைகள் ஒதுக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வுகள், செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
Reliance Jio வின் புதிய ரீசார்ஜ் ஆபர் பேக் – ரூ.185 பிளான்!
இந்த நுழைவுத் தேர்வுகளுக்கான விண்ணப்ப பதிவுகள் தற்போது துவங்கியுள்ள நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும், அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது விண்ணப்ப பதிவுகளை செலுத்த, அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் உதவ வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை கொடுத்து உதவி செய்ய வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த உத்தரவின் கீழ் அரசு பள்ளிகளை சேர்ந்த, நீட் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களது பட்டியலை அரசு தயார் செய்து வருகிறது. மேலும் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு அடிப்படையில் அதிகளவு இருக்கைகள் கிடைக்கும் என்ற அடிப்படையில் பலரும் இந்த நுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளனர்.