தமிழக தனியார் பள்ளிகளின் வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு – அரசு எச்சரிக்கை!

0
தமிழக தனியார் பள்ளிகளின் வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு - அரசு எச்சரிக்கை!
தமிழக தனியார் பள்ளிகளின் வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு - அரசு எச்சரிக்கை!
தமிழக தனியார் பள்ளிகளின் வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு – அரசு எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பள்ளிகள் அனைத்தும் செயல்பட்டு வரும் நிலையில், தனியார் பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் குறைபாடு இருக்கும் வாகனங்களை இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டால் அவை பிடிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வாகன சோதனை

தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதற்கொண்டு 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசு வெளியிட்ட முறையான நோய்த்தடுப்பு வழிகாட்டுதல்களின் கீழ் ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில் தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது.

இந்தியாவில் ஒரே நாளில் 26,041 பேருக்கு கொரோனா தொற்று – 276 பேர் உயிரிழப்பு!

இந்நிலையில், தனியார் பள்ளிகளில் மாணவர்களை அழைத்து வர உபயோகப்படுத்தும் வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யுமாறு தமிழக போக்குவரத்து துறை கமிஷனர் சந்தோஷ் மிஸ்ரா அனைத்து மாவட்டங்களை சேர்ந்த RDO அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து RDO எல்லைக்குள் அமைந்துள்ள தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக கல்வித்துறை, காவல்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் அடங்கிய குழு தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றது.

அதன் படி, பள்ளி வாகனங்களின் வேகக் கட்டுப்பாட்டு கருவி, எமர்ஜென்ஸி டோர், முதலுதவி பெட்டி, தீயணைப்பான் கருவிகள் ஆகியவை இருக்கிறதா என்றும் அவர் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர், உதவியாளர் விவரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறைபாடு இருப்பதாக கண்டறியப்படும் வாகனங்கள், மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிப்போர் கவனத்திற்கு – தமிழக அரசு அறிவுறுத்தல்!

இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தாலும் அனைத்து வாகனங்களும் இன்னும் முழுமையாக இயக்கப்படவில்லை. இதனால் கிட்டத்தட்ட 15% வாகனங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் மற்ற வாகனங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத, குறைபாடு இருக்கும் வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்படுவது தெரிந்தால் பிடிக்கப்படும்’ என தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!