தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மீண்டும் மூடல் – அரசு அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் வடலூர் இராமலிங்க அடிகளார் ஜோதி ஐக்கிய தினத்தை முன்னிட்டு இன்று (18.01.2021) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே தடையை மீறி மது விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மதுக்கடைகள் அடைப்பு:
தமிழகத்தில் பரவிய கொரோனா இரண்டாம் அலையின் போது தடுப்பு பணியாக வெகு நாட்களாக மதுக் கடைகள் மூடப்பட்டிருந்தது. நோய் தொற்று விரைவாக பரவி வரும் இந்த நேரத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால் மது பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூடுவர். இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால் மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை அதன் பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பகுதி நேரமாக மது விற்பனை நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கம் போல மதுகடைகள் செயல்பட்டது.
தமிழக காவல் துறையில் 10000 பேருக்கு வேலைவாய்ப்பு – தேர்வுக்கு தயாராக அதிகாரிகள் அறிவுரை!
கடந்த 15ம் தேதி (சனிக்கிழமை) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் திறக்க அரசு தடை விதித்தது. மேலும் ஜன.16 (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு காரணமாகவும் மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர் விடுமுறையில் ஜன.14 (வெள்ளிக்கிழமை) பொங்கலன்று மட்டுமே மது கடைகள் இயங்கியது. 317 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று (ஜன.18) வடலூர் ராமலிங்க அடிகளார் ஜோதி ஐக்கிய தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் மது கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் பசிப்பிணி போக்குவதுதான் எல்லா அறங்களுக்கும் மேலானது என்று போதித்தார். மேலும் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என சாதி, மத பாகுபாடின்றி அனைவருக்கும் மூன்று வேளையும் வழங்கியர். கடலூர் மாவட்டம் வடலூரில் இவர் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜோதி தரிசனம் நடைபெறும். அந்த வகையில் இன்று 151-வது ஜோதி தரிசன விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று அரசு அறிவித்து உள்ளது.