தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு!

0
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு - முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு - முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று துவங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த ஆட்சியை விட பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் எந்த விதத்திலும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது .

விடைத்தாள் திருத்தும் பணி:

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கபடாமல் ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்தி வந்தனர். இதனால் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமல் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா குறைந்த நிலையில் மட்டுமே 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்பின், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மாணவர்களுக்கு கண்டிப்பான முறையில் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்தது.

TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – எப்படி தயாராவது? முழு விவரம்!

அதன்படி, பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு தேர்வு தேதியும் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும், பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 5 ல் தொடங்கி மே 23ல்,10ம் வகுப்பு தேர்வு மே 6ல் தொடங்கி மே 30 வரை மற்றும் 11ம் வகுப்பு தேர்வு மே 10 ல் தொடங்கி மே 31ல் முடிவடைந்தது. தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வை சுமார் 8.85 லட்சம் பேர் விண்ணப்பித்து எழுதினர். இதன் தொடர்ச்சியாக விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கி இருக்கிறது.

மாநிலம் முழுதும் சுமார் 80 மையங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 30 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர். நேற்று தலைமை விடைத்தாள் திருத்துனர் என்ற, சி.இ.,க்கள் விடைத்தாள்களை திருத்தினர். அப்போது தாள்களில் தவறுகள் உள்ளதா மற்றும் தினமும் ஒரு ஆசிரியர் 24 விடைத்தாள்களை திருத்த போதுமான நேரம் உள்ளதா என சோதனை செய்யப்பட்டு இன்று முதல் உதவி விடை திருத்துனர் விடைத்தாள்களை திருத்துவார்கள் என தெரிவித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

ஆசிரியர்கள் மதிப்பெண் வழங்குவதை பொறுத்தவரை மிகவும் கண்டிப்புடன் இல்லாமல் நடுநிலையாக செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாடங்களை புரிந்து படித்து பதில் எழுதினாலும் மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து திமுக ஆட்சிக்கு வந்த பின் நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்வு என்பதால் கடந்த ஆட்சியை விட தேர்ச்சி குறையாமல் பார்த்துக் கொள்ளும் படி ஆசிரியர்களுக்கு திமுக அரசு எச்சரித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!