தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – அரசின் சூப்பரான அறிவிப்பு!
தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது அரசு பள்ளிகளில் விடுதியில் உள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கான செலவினத் தொகையை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த தொகையை உயர்த்துவதாக தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் கவனத்திற்கு:
தமிழகத்தில் ஏழை மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பாக இலவசமாக சீருடை, புத்தகம், மிதிவண்டி கணினி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் வரும் கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் முதற்கட்டமாக 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
ஜூன் மாதம் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளை பற்றியும் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு பயின்ற மாணவிகளுக்கு உயர் கல்வியில் சேரும்போது அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி 2022 – 2023ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது தமிழக முதல்வர் ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவர் தனது அறிவிப்பில், தமிழகத்தில் 22 அரசு பள்ளி விடுதிகளில் 1053 மாணாக்கர்கள் தங்கி படித்து வருகின்றனர். இவர்களுக்கு தன் சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக சோப்பு, தேங்காய் எண்ணெய் மற்றும் இதர செலவினங்களுக்காக ரூ.30 வழங்கப்பட்டு வருகிறது. இதனை வருகிற கல்வியாண்டில் ரூ.50 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்காக ரூ.2.52 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.