தமிழக அரசில் ரூ.10,000 ஊதியத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு – நேரடி பணியமர்த்தல்!
திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Physiotherapist பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் இதற்காக விண்ணப்பிக்க தகுதி உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பணியிடம்:
திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Physiotherapist பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால், ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Physiotherapist பணிகளுக்கு என 02 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தகுதிகள்:
இந்த பணிக்கு அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் / பல்கலைக்கழகங்களில் Physiotherapy பாடப்பிரிவுகளில் இளங்கலை (UG) டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.10,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பம்:
விண்ணப்பிப்போர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். பணிக்கான நேர்காணல் நாளை (9.9.2021) நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் நாளை நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பணியினை பற்றிய மேலும், அதிக தகவல்களை அறிய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணைப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.