தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு? முதல்வரின் திட்டம் என்ன!
தமிழகத்தில் அரசு பணியில் பணிபுரியும் ஊழியர்களின் வயது வரம்பு 60ளிருந்து தற்போது 58 ஆக மாற்றி அமைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக இருக்கும் பட்சத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என முதல்வர் இந்த ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
ஓய்வு வயது 58 :
தற்போது தமிழகத்தில் இளைஞர்களின் கனவாக இருந்து வருவது அரசு வேலை பெறுவது என்றாகி உள்ள நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக இருந்து வந்தது. அ.தி.மு.க ஆட்சியின்போது தமிழகத்தில் அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 60 ஆக மாற்றி அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவ்வாறு உயர்த்தியத்தின் காரணமாக மேலும் 2 வருடங்கள் வேலை பார்க்க நேரிட்டால் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றது.
2022 வரை work from home தான் – ஐடி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
இதன் காரணமாக தற்போது பதவி வகிக்கும் தி.மு.க கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அரசு துறைகளில் பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக குறைக்கலாம் என ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இளைஞர்கள் அரசு வேலை பெறுவதற்கு ஓய்வு காலம் தடையாக இருக்க கூடாது என்கிற அடிப்படையில் இந்த காலத்தை மீண்டும் 58 ஆக மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் முதற்கட்டமாக ஓய்வு பெறும் வயது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. கூடிய விரைவில் இது அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி கொடுக்கும் என அனைவராலும் நம்பப்பட்டு வருகிறது.