தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது – 58 ஆக குறைக்க கோரி வலியுறுத்தல்!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை 58 ஆக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வு பெறும் வயது:
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது முதலில் 58 வயதாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ல் இருந்து 59 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அரசின் அப்போதைய நிதி நிலை மற்றும் கொரோனா தொற்று சூழலை கருத்தில் கொண்டு இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
11ம் வகுப்பு அரியர் மாணவர்கள் கவனத்திற்கு – செய்முறை புறத்தேர்வு செயல்முறை வெளியீடு!
அதனை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வயது மீண்டும் உயர்த்தப்பட்டு 60 ஆக அதிகரிக்கப்பட்டது. ஏற்கனவே மக்கள் தொகை அதிகரிப்பு, கொரோனா, பொருளாதார சரிவு உள்ளிட்ட காரணங்களால் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் உள்ளது. இந்த சூழலில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டதால் இளைஞர்கள் அரசு பணிக்கு செல்வதில் காலதாமதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறும் வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்களை போல தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.