அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 10 கடைசி நாள்!
தமிழகத்தில் நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021-2022 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு இணையதளம் மூலம் ஆகஸ்ட் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் மதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்க பள்ளிக் கல்வித்துறை தனிக்குழு அமைத்து கலந்தாலோசித்து அதன் பிறகு மதிபெண்கள் கடந்த ஜூலை 19ம் தேதி இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது. இந்தாண்டு அனைத்து 12ம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதால் கல்லூரிகளில் சேருவதற்க்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
Tokyo Olympics Wrestling 2020 : இந்தியர்களின் கனவு தகர்ந்தது! ரவிக்குமாருக்கு வெள்ளி பதக்கம்!
அதனை தொடர்ந்து கொரோனா அதிகம் பரவி வருவதால் மாணவர்களும், பெற்றோர்களும் கூடுவதை தவிர்க்க இணையதளம் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்த உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை 26ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அனைத்து கல்லூரிகளின் நுழைவு வாயில்களிலும் மாணவர் சேர்க்கை குறித்த விவரங்கள் தகவல் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
மற்ற கல்லூரிகளை தொடர்ந்து நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021-2022 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. B.Sc., கணினி பொறியியல், கணிதம், இயற்பியல், விலங்கியல், மற்றும் B.Com., வணிகவியல், புள்ளியியல் மேலும் BBA போன்ற பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் கல்லூரியின் இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.