தமிழகத்தை தாக்கும் புதிய வைரஸ்கள் – என்ன தான் காரணம்? உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

0
தமிழகத்தை தாக்கும் புதிய வைரஸ்கள் - என்ன தான் காரணம்? உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!
தமிழகத்தை தாக்கும் புதிய வைரஸ்கள் - என்ன தான் காரணம்? உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!
தமிழகத்தை தாக்கும் புதிய வைரஸ்கள் – என்ன தான் காரணம்? உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

தமிழகம் அண்மை காலமாக தொடர்ந்து வைரஸ் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனாவில் தொடங்கி தற்போது இன்புளுயன்சா காய்ச்சல் வரை மக்களை தாக்கி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசுக்கு சென்னை உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

புதிய வைரஸ்கள்:

தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவி பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் அதிகப்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசுகளும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு மக்களிடம் பல வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் வைரஸ் பாதிப்புகள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் வைரஸை எதிர்க்க பேரயுதமாக தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த தடுப்பூசி மனித உடலில் நல்ல பலனை அளித்தது. மேலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வந்தது.

இதிலிருந்து மீண்டு விட்டோம் என்று மக்கள் சற்று ஆறுதலடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருந்த போது அடுத்த தாக்குதலாக குரங்கு அம்மை பரவத் தொடங்கியது. அதனை தொடர்ந்து தற்போது பருவநிலை மாற்றத்தால் இன்புளுயன்சா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு தொடர்ந்து தமிழகம் வைரஸ் பாதிப்புகளுக்கு ஆளாகி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மத்தியில் கோவை அரசு மருத்துவமனை மருந்தக பொறுப்பாளர் காலாவதியாகிய மருந்துகளை வழங்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

அக்னி பாத் திட்டத்தின் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கை – ஒப்பந்தங்கள் இறுதி!

Exams Daily Mobile App Download

இது குறித்த விசாரணையில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் கொரோனா, குரங்கு அம்மை, இன்புளுயன்சா போன்ற வைரஸ் நோய்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக மக்கள் சந்தேகிக்கின்றனர். இந்த நிலையில் அரசு மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கிறதா என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!