தமிழக பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்த தடை – போக்குவரத்துத்துறை உத்தரவு!
தமிழகத்தில் பேருந்து ஓட்டுநர்கள், பனியின் போது செல்போன்களை உபயோகிக்க கூடாது என கண்டித்து சில வழிகாட்டுதல் நடைமுறைகளை வெளியிட்டு நெல்லை மண்டலப் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
செல்போன் தடை:
பொதுவாக வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் போது செல்போன்களை பயன்படுத்த கூடாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. இத்தனையும் மீறி செல்போன் பேசிக்கொண்டு சாலைகளில் வாகனங்களை ஒட்டி செல்லும் போது விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க பல வித கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், விபத்துகள் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்நிலையில் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போனை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – CEO செயல்முறைகள் வெளியீடு!
இது தொடர்பாக நெல்லை மண்டல போக்குவரத்துத்துறை, திருச்செந்தூர் பகுதியில் பணி செய்து வரும் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அனைவரும் சில வழிகாட்டுதல் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. அதன் படி பணி செய்யும் போது பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தங்களின் வாகன உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும். தொடர்ந்து பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் செல்போனை பயன்படுத்துவத்தை தவிர்க்க வேண்டும். மேலும் ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கும் போது அவர்களுடைய செல்போனை நடத்துநரிடம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர இக்கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.