தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரியம் அமைப்பு – அரசு அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவையில் இன்று செய்தித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் அவர்கள் கூறியுள்ளார்.
செய்தித்துறை அறிவிப்பு:
தமிழகத்தில் புதிய ஆட்சிக்கு பின்னர் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர், வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் துறைகளின் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் திட்டங்கள் குறித்து சட்டப்பேரவையில் கூட்டம் நடந்து வருகிறது. தொடர்ந்து தினமும் வரிசையாக துறை வாரியாக விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று செய்தித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
ஆப்கானில் ஆண், பெண்களுக்கு இடையே திரையிட்டு பல்கலை வகுப்புகள் – தலிபான்கள் ஆட்சி!
அதில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் பத்திரிக்கையாளர்கள் செய்திகளை சேகரிக்க காலத்தில் இறங்கி பாடுபடுகின்றனர். இவ்வாறு பணிகாலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களுக்கான குடும்ப நிதியுதவி ரூ.3 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. அதனை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
TCS நிறுவனத்தில் ஆப் கேம்பஸ் மூலம் வேலைவாய்ப்புகள் – விண்ணப்ப முறை & தகுதிகள்!
மேலும் பத்திரிக்கையாளர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு குடும்ப உதவி நிதியுடன், கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1 லட்சம் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை கட்டணத்தில் வீட்டுமனை, அரசு வாடகை குடியிருப்பு ஒதுக்கீடு போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இளம் பத்திரிக்கையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.