தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – அரசு சுற்றறிக்கை!!
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்களின் தரம் நிறம் குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்டு அனுப்பும்படி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
விலையில்லா பொருட்கள்:
கொரோனா பெருந்தொற்று முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என கோரத்தாண்டவம் ஆடியதால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. தற்போது வரும் செப்டம்பர் 9ம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் வரை பள்ளிக்கு அனுமதிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
SBI வங்கி வீட்டுக்கடன் பெறுவது எப்படி? முழு விபரங்கள் இதோ!
அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் இலவச உபகரணங்கள் தரம், அளவு, வண்ணம் மற்றும் மாணவர்கள் பயன்படுத்த ஏற்ற வகையில் இருக்கிறதா என்ற கருத்துக்களை பெற்று அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கிய 4 அல்லது 5 நாட்களுக்குள் கருத்துக்களை மாவட்ட ரீதியாக தனித்தனியாக பெற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விலையில்லா பொருட்களின் தேவையின் அளவு குறித்த பட்டியலும் வழங்க வேண்டும் என கூறப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இவ்வாறு பெறப்படும் விலையில்லா பொருட்களின் தரம் முதலியன குறித்து அலுவலர்கள் மூலம் சரிபார்க்க வேண்டும் என்றும் அது குறித்த விவரத்தை உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள் வாயிலாக கருத்துகள் கோரப்பட்டுள்ளன. அதற்காக வழங்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து கல்வி மாவட்டம் வாரியாக தொகுப்பறிக்கையை சென்னை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு இரண்டு நகல்கள் விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும் எனவும் கூறப்படுகிறது.