தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். இந்த திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
உரிமைத்தொகை:
தமிழகத்தில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போது முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சில வாக்குறுதிகளை அளித்தார். அதில் ஒன்றாக குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகையாக வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
ஏற்கனவே ரேஷன் கடைகள் மூலம் மக்கள் குறைந்த விலையில் வீட்டு மளிகை பொருட்கள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று வரும் நிலையில் உரிமைத்தொகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்த நிலையில் திமுகவினர் ஆட்சிக்கு வந்து 1 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை குடும்ப தலைவிகளுக்கான உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்? என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நாளை 71,000 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் – பிரதமர் மோடி வழங்கல்!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் திருப்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற 69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் கலந்து கொண்டு பேசிய கூட்டுறவுறை அமைச்சர், சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் உரிய நேரத்தில் முதல்வர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறியுள்ளார்.