தமிழகத்தில் வீர தீர செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ – ரூ.1 லட்சம் காசோலை! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் வீர தீர செயல்கள் புரிந்த நபர்களை பாராட்டும் வகையில் தமிழக அரசு சார்பாக அண்ணா பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான அண்ணா பதக்கம் விருது வழங்கப்படவுள்ளது. இதற்கு தகுதி பெற்ற நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பதக்கம்:
தமிழகத்தில் ஆண்டுதோறும் வீர தீர செயல்கள் புரிபவர்கள் மற்றும் திறமை, துணிவு கொண்டவர்களை பாராட்டி சுதந்திர தின விழாவின் போது கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து வீர தீர செயல்கள் புரிபவர்களை பாராட்டும் வகையில் குடியரசு தின விழாவின் போது தமிழக அரசு அண்ணா பதக்கம் என்ற விருதை வழங்கி சிறப்பித்து வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான ‘அண்ணா பதக்கம்’ விருது பெற விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் வீர, தீரச் செயல்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
வரிசையாக அப்டேட்களை அள்ளி தெளிக்கும் வாட்ஸ் அப் – அசத்தலான லேட்டஸ்ட் அறிமுகம் என்ன தெரியுமா?
Exams Daily Mobile App Download
இந்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.12.22 ஆகும். இந்த காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு விருது பெற தகுதியான நபர்கள் அரசின் தேர்வு குழுவால் தேர்தெடுக்கப்படுவார்கள். இவர்களுக்கு குடியரசு தின விழாவின் போது முதல்வர் ரூ.9000 மதிப்புள்ள பதக்கத்தை வழங்கி சிறப்பிப்பார்.. அத்துடன் ரூ.1,00,000/- க்கான காசோலை வழங்கப்படும்.