தமிழகத்தில் அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அரசு அளித்த விளக்கம்!

0
தமிழகத்தில் அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அரசு அளித்த விளக்கம்!
தமிழகத்தில் அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அரசு அளித்த விளக்கம்!
தமிழகத்தில் அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அரசு அளித்த விளக்கம்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருக்கும் நிலையில் அது பற்றி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

மீண்டும் ஊரடங்கு:

சீனாவில் வேகமெடுத்து வரும் கொரோனா பாதிப்பால் இந்தியாவில் ஜூன் மாதத்தில் கொரோனா நான்காம் அலை தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மத்திய அரசு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை எடுக்க அறிவுறுத்தி இருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் சென்னை ஐஐடியில் மட்டும் இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஒரே வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – UAN எண்ணை அறிந்துகொள்வது எப்படி?

அதனால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். தற்போது பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா என்பது பற்றி சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறார். அதன் படி 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை. 9 மாவட்டங்களில் மட்டுமே ஓரளவிற்கு பரவல் இருக்கிறது. தமிழகம் முழுவதும் 1.48 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.

Exams Daily Mobile App Download

மக்கள் நான்காம் அலை பாதிப்பில் இருந்து தப்பிக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழக மக்கள் கவலைப்படும் கட்டத்தில் இல்லை. அக்கறை காட்ட வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். தர்மபுரி, ராணிப்பேட்டை, மதுரை, திருப்பத்தூர், நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் மக்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டும் கொரோனாவை தடுக்க ஒரே வழி, தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை. மருத்துவமனைகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கிறது. மேலும் அங்கே மின்வெட்டு பிரச்னை இல்லை. அவ்வாறு இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவமனைகளிலும் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!