தமிழகத்தில் 1212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றம் – அரசு நடவடிக்கை!
கடந்த 2015-2016 ஆம் ஆண்டு எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டிருந்த செவிலியர்கள் தற்போது நிரந்தர ஊழியர்களாக செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
எம்ஆர்பி தேர்வு
தமிழகத்தில் கடந்த 2015-2016 ஆம் கல்வி ஆண்டில் எம்ஆர்பி தேர்வு செவிலியர்களுக்கு நடத்தப்பட்டது. எழுத்து மற்றும் இதர தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் 1212 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசு சார்பில் பணி அமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு மாத ஊதியமாக 15 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.
இந்தியாவில் கடந்த ஆண்டு 75 லட்சம் பேர் வேலையிழப்பு – முழு ஊரடங்கு எதிரொலி!!
இப்படியாக இருக்க, இவர்களது பணி தற்போது தமிழக அரசு சார்பில் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர்களது மாத ஊதியம் 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கொரோனா பணிக்கு அமர்த்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது.
ஒரு நாளைக்கு குறைந்தபட்சமாக 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. கொரோனா நோயாளிகள் அதிகரித்த வண்ணம் இருப்பதால் தற்போது செவிலியர்களுக்கான பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்