தமிழகத்தில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி – கூட்டுறவுத்துறை அமைச்சர் விளக்கம்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை அடகு வைத்து கடன் பெற்றவர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். நகைக்கடன் தள்ளுபடி குறித்து சில விளக்கங்களை அளித்துள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் முந்தைய அதிமுக தலைமையிலான அரசு கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. இதற்கிடையில் தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றார். இதனையடுத்து வாக்குறுதிகளில் தெரிவித்த பல்வேறு நலத்திட்டங்கள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த நகைக்கடன் தள்ளுபடி குறித்து முதல்வர் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் கண்டிப்பாக தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்து உள்ளார்.
தமிழகம் முழுவதும் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!
மேலும் இந்த சலுகையை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், பயனர்கள் தேர்வுக்கான விதிமுறைகள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என கூறப்பட்டது. தற்போது இதற்கான பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். நகைக்கடன் பெற்றவர்களின் விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் சில தகவல்களை வெளியிட்டார். அவர் பேசுகையில், 5 சவரன் வரை அடகு வைத்துள்ள உரிய ஏழை, எளிய மக்களுக்கு கண்டிப்பாக கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு? DA விரைவில் அறிவிப்பு!
கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட நகைக்கடனில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அது தொடர்பாக முழுவதுமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். உரிய தகுதி உடையோருக்கு நகைக்கடன் கண்டிப்பாக தள்ளுபடி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.