பொறியியல் இறுதி ஆண்டு வைவா வாய்ஸ் தேர்வு ஆன்லைன் நடைபெறும் !!!!
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்படும் வைவா வாய்ஸ் (வாய்மொழித் தேர்வு) தேர்வு ஆனது ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. மேலும் தேர்விற்கான வழிமுறைகள் வெளியாகி உள்ளது.
இறுதி ஆண்டு தேர்வு :
கொரோனா தொற்றின் பரவல் காரணமாக கல்லூரி மாணவர்கள் அனைவர்க்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது. ஆனால் யுஜிசி ஆனது இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தது.
இதன் காரணமாக தமிழகத்தில் பொறியியல் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் தற்போது நடத்தப்பட உள்ளது. வரும் 22 ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என்று ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது.
ஆன்லைனில் வைவா வாய்ஸ் !
இந்நிலையில் மாணவர்களுக்கு வைவா வாய்ஸ் எனப்படும் வாய்மொழித் தேர்வு ஆனது ஆன்லைனிலேயே நடத்தப்பட வேண்டும் எனவும், ஆய்வு கட்டுரைகளையும் ஆன்லைனிலேயே சரிபார்க்க வேண்டும் எனவும் தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எக்காரணத்தை கொண்டும் மாணவர்களை நேரில் வரவழைக்க கூடாது என்றும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்