பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. எனவே தேர்வுகள் யாவும் தள்ளி வைக்கப்படும் ரத்து செய்யப்பட்டும் வருகின்றன.
இதனால் பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு நடக்க முடியாமல் கிடக்கின்றன. மேலும் விண்ணப்பிக்கும் பணிகளும் முடிவடையாமல் உள்ளன. இதனால் மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றன.
இந்நிலையில் அகில இந்திய கல்வி கவுன்சில் சார்பில் ஒரு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப் 15 அன்று கடைசி தேதி ஆக அறிவிக்கப்ட்டுள்ளது. ஆனால் அதனை 3 முறையாக மாற்றி அவகாசத்தினை அதிகரித்து உள்ளது.
அதாவது வரும் அக்டோபர் மாதம் 20 தேதி வரை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தற்போது புதிய அறிவிப்பினை கல்வி கவுன்சில் வெளியிட்டு உள்ளது. இதனால் கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது 3 ஆவது முறையாக நீடிக்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |