தமிழகத்தில் ஜனவரி 21 ஆம் தேதி சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் – 10,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள்!!
தமிழகத்தில் வரும் ஜனவரி 21 ஆம் தேதியன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது. இந்த முகாமில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக பல்வேறு தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பின்படி, ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் ஜனவரி 21 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
தமிழகத்தில் ஏப்ரல் முதல் 442 தாழ்தள பேருந்துகள் இயக்கம் – உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்!!
இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது சுய விவரங்கள் அடங்கிய குறிப்பு, கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை உடன் எடுத்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். சுமார் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட இருக்கிறது. முகவரி: நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெருந்துறை ரோடு, ஈரோடு மாவட்டம்.