தமிழகத்தில் 1 யூனிட் மின்சாரம் ரூ .8. 50க்கு டெண்டர் – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் இன்று மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் நடப்பு ஆண்டு மின் உற்பத்தி நிலையத்திடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் 8. 50 ரூபாயில் பெற டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மின் உற்பத்தி:
தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் பொதுமக்களுக்கு தேவைப்படும் மின்சாரத்தை விநியோகம் செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
மகளிர் தினம் 2023: நாளை ஒரு நாள் இலவசமாக பேருந்தில் பயணம் – அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசு!
அதில் தமிழகத்தில் புனல், காற்றாலை, சூரிய மின்சக்தி மற்றும் எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி அளவு குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து கோடை காலத்திற்காக நடப்பு ஆண்டு மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து 1,562 மெகாவாட் மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூ. 8.50 என்ற விலையில் பெற ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Follow our Instagram for more Latest Updates
இந்த டெண்டர் மூலம் மின்பகிர்மான கழகத்திற்கு ரூ. ரூ.1,312 கோடி மிச்சமாகியுள்ளது என்றும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து நடப்பு ஆண்டு அனல் மின் உற்பத்தி 20,307 ஆக அதிகரித்துள்ளது அதே போல புனல் மின் உற்பத்தி 5,905 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 % அதிகம் என்று தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download