தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – ஜூன் 24 மின்தடை!
தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் ஜூன் 24 (நாளை) காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின்தடை செய்யப்படும் என நாமக்கல் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்தடை:
தமிழகத்தில் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மின் வாரியம் மூலமாக மின் கம்பங்கள் பராமரிப்பு மற்றும் பிற பணிகள் நடைபெறும். இதன் மூலம் மக்களுக்கு பாதுகாப்பான தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. கடந்த பல மாத காலமாக மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. தற்போது கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு மாவட்டமாக மின் பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ளது.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – கல்வி தொலைக்காட்சி வகுப்புகள்!
ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. அடுத்து சென்னையில் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னறிவிப்புடன் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. பணிகள் நடைபெறும் வரை அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் முழுவதும் தடை செய்யப்பட்டது. 1 மணிக்கு பிறகு மீண்டும் மின் விநியோகம் செய்யப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து நாளை நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வழவந்தி, ரெட்டையாம்பட்டி, செவந்திபட்டி, குரும்பப்பட்டி ,நல்லூர் , திப்ரமகா தேவி, வடுகப்பட்டி, மோகனுர், ஒருவந்தூர் ஆகிய பகுதிகளில் ஜூன் 24 ம் தேதி நாளை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என நாமக்கல் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இது எல்லா ஆட்சிகாலத்திலும் நடந்தது இதை எதிர் கட்சிகள் மின்வெட்டு என்று கூப்பாடு போடுகிறது