தமிழக சட்ட சபை தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் – இன்று மாலை வெளியீடு!!
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள இறுதி கட்ட வேட்பாளராக்களின் பட்டியலை தொகுதி வாரியாக இன்று மாலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் நடப்பு ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி அன்று தேர்தல் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. சட்டமன்ற தேர்தல் பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். தேர்தல் பற்றிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் பிப்ரவரி மாத இறுதியில் வெளியிட்டது. தேர்தலுக்கான அறிவிப்புகள் வந்தது முதல் தமிழகத்தில் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி விட்டது.
தமிழகத்தில் 25 ஆண்டுகள் சிறைக் காவலராக பணியாரியவர்களுக்கு பதவி உயர்வு – அரசிடம் கோரிக்கை!!!
வேட்பாளர்கள் பட்டியல்:
தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வேட்பாளராக நியமிக்கப்படுவார்கள். கட்சியின் சார்பில் முதற்கட்டமாக வேட்பாளர்களின் பட்டியல் கடந்த வாரம் முதல் வெளியிடப்பட்டு வந்தது.
சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 6,183 ஆண்கள் , 1,069 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 3 பேர் என மொத்தம் 7,255 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். மேலும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தொகுதிக்கு 23 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இறுதி பட்டியல் வெளியீடு:
வேட்பாளர்கள் பட்டியல் நேற்று பரீசீலிக்கப் பட்டது. குறிப்பிட்ட அளவில் வேட்பாளர்களின் பரீசீலினையின் போது தள்ளுபடி செய்யப்பட்டது. அனைத்து தொகுதிகளிலும் வேட்பு மனுவை வாபஸ் பெற விரும்புவோர் இன்று மாலை 3 மணிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. இறுதியில், சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டு இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்