திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!

1
திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!
திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!
திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!

தமிழக சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு விடுமுறை:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள், வேட்புமனு தாக்கல், தேர்தல் அறிக்கை என அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. பல முன்னணி அரசியல் கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் நோக்கில் மக்களிடம் நேரடியாக இறங்கி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

மேலும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் அனைத்து அரசு அலுவலர்களும் இயக்கப்பட்டு வருகிறது. அரசு அலுவலர்கள், ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நான்கு கட்டங்களாக நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதற்கான தேதிகள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது.

தமிழக பள்ளிகளில் மேலும் 2 ஆசிரியைகளுக்கு கொரோனா உறுதி – மாணவர்கள் அச்சம்!!

இந்நிலையில் இன்று முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதில்ல மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் தெரிவித்துள்ளார். சில மாவட்டங்களில் 50% ஆசிரியர்கள் ஒருநாள், மீதி 50% ஆசிரியர்கள் மறுநாள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பள்ளிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. தேர்தல் நேறத்தில் .
    பள்ளிகளை
    திறந்து
    மாணவர்களின்
    உயிர்களிள்
    விளையாட
    வேண்டாம்.

    உடனே அனைத்து பள்ளிக்கல்லூரிகளை .விடுமுறை.விட்டால் மிகவும் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!