தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2ம் கட்ட தேர்தல் பயிற்சி தேதி வெளியீடு!
தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வாக்கு சாவடிகளில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.
தேர்தல் பயிற்சி:
தமிழகத்தில் கொரோனா 3 வது அலை காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மீண்டும் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை என அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்புக்கு தனியார் பள்ளி சங்கங்கள் சார்பில் எதிர்ப்பு கிளம்பின. மேலும் சில தினங்களுக்கு முன்பு முதல்வர் தலைமையில் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்குகளில் தளர்வு அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் இரவு நேர கட்டுப்பாடு – பிப்.10ம் தேதி முதல் அமல்!
இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு அடிப்படையில்தான் கொரோனா குறைந்து விட்டதாகவும் ஊரடங்குகளில் தளர்வு அளித்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இருப்பினும் தேர்தல் பணிகள் கொரோனா தடுப்பு விதிமுறைகள் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அமலாகும் பழைய ஓய்வூதிய திட்டம்?
இந்த வகையில் சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார். மேலும் தேர்தல் பணிகளில் அரசு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வகையில் தேர்தல் பணியில் மொத்தம் 27,000 பணியாளர் ஈடுபடுகின்றனர். இதனை தொடர்ந்து தேர்தல் பணியாளர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி நடைபெறும் என ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். மேலும் பதற்றம் நிறைந்த தேர்தல் வாக்கு சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் பணி நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.