தமிழக வாக்கு எண்ணும் மையங்களுக்கான வழிமுறைகள் – காவல் துறை அறிவிப்பு!!
மே 2ம் தேதி அன்று தமிழக சட்ட மன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நடக்க இருக்கும் வேளையில், கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழக காவல் துறை அறிவித்துள்ளது.
வழிமுறைகள்:
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடத்தப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அனைத்து தொகுதிகளுக்கான வாக்கு பதிவும் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
கொரோனா நோயாளிகள் படுக்கை வசதி பெற புதிய கேஷ்டேக் – தமிழக அரசு அசத்தல்!!
வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு 24 நாட்களாக காவல் துறையினர் இரவு பகலாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர மே 1 ம் தேதி இரவு முதல் வாக்கு எண்ணும் மையங்களில் 1 லட்சம் காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடு பட உள்ளதாக தமிழக காவல் துறை அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போது வாக்கு எண்ணும் மையங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தமிழக காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, தமிழகத்தில் மே 2ம் தேதியன்று வாக்கு எண்ணும் மையங்களில் செல்போன், கேமரா, பேனாக்கள், பாட்டில்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிபன்பாக்ஸ், குடைகள், வேதிப்பொருட்கள், தின்பண்டம், தீக்குச்சிகள் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.