தமிழகத்தில் அனைவருக்கும் படிப்பிற்கேற்ற வேலை – அமைச்சர் பெருமிதம்!
தமிழக அரசு தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தில் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது அரசு பள்ளி பாடத்திட்டம் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை ஒத்துள்ளதாக கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
பாடத்திட்டம்:
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அரசும் பள்ளிக்கல்வித்துறையும் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் அங்குள்ள அரசு பள்ளிகளை பார்வையிட்டு அதன் விவரங்கள் குறித்து ஆராய்ந்து தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கும் அதே கல்வி முறை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் டெல்லி மாடல் பள்ளிகளை உருவாக்கியுள்ளார்.
Exams Daily Mobile App Download
இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது அரசு பள்ளி மாணவர்களை மத்திய மாநில உயர்கல்வி நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ளும் வண்ணம் பள்ளிகளிலே பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் சிபிஎஸ்சி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பாடத்திட்டம் அனைத்தும் அரசு பள்ளி பாடத்திட்டத்தை ஒத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
மேலும் அனைவருக்கும் படிப்புக்கேற்ற வேலை என்பதே திராவிட மாடல். அத்துடன் திறமை என்பது நீங்கள் பெறும் மதிப்பெண்களில் இல்லை. அது மாணவர்களின் தனித்திறன் திறமையில் உள்ளது. அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம் என்பதை உணர்த்தவே அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.